கல்லூரி மாணவியிடம் உல்லாசமாக இருந்து கருவை கலைத்த காதலன் கைது

College Lovers
College Lovers

திருவண்ணாமலை : இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள பாசர்புரம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ., 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கும், அவரது அக்காள் கணவரின் தம்பி செந்தமிழ்செல்வனுக்கும் (வயது 27) இடையே காதல் ஏற்பட்டது. அப்போது காதலியிடம், செந்தமிழ்செல்வன் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார்.

இதையடுத்து அந்த மாணவி, செந்தமிழ்செல்வனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார். அப்போது அவர், சில நாட்கள் போகட்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி மாத்திரைகள் வாங்கி கொடுத்து கருவை கலைத்துள்ளார்.

பின்னர் திருமணத்திற்கு செந்தமிழ்செல்வன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து காதலி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தமிழ்செல்வனை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.